ஸ்ரீ பெரும்புதூர் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (23). கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்து 2 நண்பர்களுடன் வெளியே சென்ற ஜான்ரோஜ், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கடந்த 7ம் தேதி போந்தூர் பகுதியில் சாலையோர முட்புதரில் வாலிபர் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.  பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜான்ரோஸ் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று ஜான்ரோஸ், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கத்தியுடன் போந்தூருக்கு சென்றனர்.

அப்போது, அங்கிருந்த சிலர், 2 பேரும் கத்தியுடன் சுற்றிவதை பார்த்து, தட்டிக் கேட்டனர். அவர்களிடம் ஜான்ரோஸ் கத்தி காட்டி மிரட்டியதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு 2 பேரையும் விரட்டினர். அதில், கார்த்திக் தப்பினார். பிடிபட்ட ஜான்ரோசை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். அதில் அவர் முட்புதரில் விழுந்து இறந்தார் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார், ஜான்ரோஸ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை போந்தூரை சேர்ந்த ரகுமான் (30), ரஜினி (27), முருகன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: