ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (23). கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்து 2 நண்பர்களுடன் வெளியே சென்ற ஜான்ரோஜ், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கடந்த 7ம் தேதி போந்தூர் பகுதியில் சாலையோர முட்புதரில் வாலிபர் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜான்ரோஸ் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று ஜான்ரோஸ், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கத்தியுடன் போந்தூருக்கு சென்றனர்.