இரட்டை மடி வலை தடுக்கக் கோரி தரங்கம்பாடியில் போராட்டம்: மீனவர்கள் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு

தரங்கம்பாடி: சுருக்குமடி வலையை தடை செய்யவும், அனுமதிக்க கோரியும் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நண்டலாறு செக்போஸ்ட் அருகே மற்றொரு பிரிவினர் திரண்ட னர். தரங்கம்பாடியில் போராட்டம் நடத்தியவர்கள் நண்டலாறு செக்போஸ்ட் அருகே செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தின்போது சிலர் கல்வீசியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வத்திற்கு மண்டை உடைந்தது.  நாகை கலெக்டர் பிரவீன் பி நாயர், எஸ்பி செல்வநாகரத்தினம் விரைந்து சென்று இருதரப்பு மீனவர்களையும் சமாதானம் செய்தனர்.

Related Stories: