புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய, சீன எல்லையில் இருதரப்பு ராணுவமும் படைகளை குவித்தன. இதனால் போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 3 நாளில் சர்ச்சைக்குரிய 3 இடங்களில் இருந்து சீனா தனது படைகளை முழுமையாக வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.