பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. வருடந்தோறும் மத்திய அரசு சார்பில் ஒரு கிலோ நெல்லிற்கு 50 பைசா விலை ஏற்றம் செய்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் 25 பைசா விலை ஏற்றம் செய்வது வழக்கம்.