மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று உறுதி, 4,163 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 46,105 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,163 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,829 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 47 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 2,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மொத்தம் 55,156 பேர் குணமடைந்துள்ளனர். 18,616 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 27 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழப்பு 1,196 ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 101 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 53 அரசு மருத்துவமனைகளில், 48 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 14,64,281 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 79,582 பேரும், பெண்கள் 50,657 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 6442 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 108035 பேரும், 60 வயதிற்கு மேல் 15784 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: