கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த வில்சன் ஜனவரி 8-ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.