புதுடெல்லி: ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூடங்கள் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றோம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் தொடர்ச்சியாக கல்வி கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், பள்ளி கட்டண வசூலுக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.