திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது. சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஸ்வப்னா தொடர்பை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. உபா சட்டத்தின் கீழ் ஸ்வப்னா மீது என்.ஐ.எ வழக்கு பதிவு செய்கிறது. தற்போது ஸ்வப்னா தலைமறைவாக உள்ள நிலையில் அவர் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.