×

சென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 20,271 பேர்..அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,553 பேர் சிகிச்சை: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை : சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக உள்ளது. 1,169 பேர் உயிரிழந்த நிலையில், 52,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,362 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 57.95 சதவீதம், பெண்கள் 42.05 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 8,128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 957 பேரும், மணலியில் 396 பேரும்,  மாதவரத்தில் 712 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,522 பேரும்,  ராயபுரத்தில் 1,582 பேரும், திருவிக நகரில் 1,538 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 1,243 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,236 பேரும், தேனாம்பேட்டையில் 2,036 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,553 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 1,051 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 731 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,263 பேரும்  பெருங்குடியில் 649 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 440 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Korena ,corporations , Chennai Corporation, Corona, Treatment, zone
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...