புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,296-லிருந்து 7,93,802-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,129-லிருந்து 21,604-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378-லிருந்து 4,95,513-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,76,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,27,259 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,26,581 பேருக்கும், டெல்லியில் 1,07,051 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-அந்தமான் நிகோபார் தீவுகள் - 151ஆந்திர பிரதேசம் - 23814அருணாச்சல பிரதேசம் - 302அசாம் - 14032பீகார் - 13944சண்டிகர் -523சத்தீஸ்கர் - 3675தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 411டெல்லி - 107051கோவா - 2151குஜராத் - 39194அரியானா - 19369இமாச்சல பிரதேசம் - 1140ஜம்மு - காஷ்மீர்- 9501ஜார்க்கண்ட் -3246கர்நாடகா - 31105கேரளா -6534லடாக் - 1055மத்திய பிரதேசம் - 16341மகாராஷ்டிரா - 230599மணிப்பூர் - 1450மேகாலயா -113மிசோரம் - 197நாகலாந்து - 673ஒடிசா -11201புதுச்சேரி - 1151பஞ்சாப் - 7140ராஜஸ்தான் - 22563சிக்கிம் - 134தமிழ்நாடு - 126581தெலுங்கானா - 30946திரிபுரா - 1776உத்தரகாண்ட் - 3305உத்தர பிரதேசம் - 32362மேற்கு வங்காளம் - 25911மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-4161மொத்தம் - 7,93,802