சென்னையை காவு வாங்கும் கொரோனா பலி: இன்று காலை நிலவரப்படி சென்னையில் மட்டும் 25 பேர் கொரோவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை, தொழிலதிபர் உள்பட 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 73 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், கொரோனாவுக்கு நேற்றுவரை 1,169 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. .

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கே.எம்.சி. மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Related Stories: