கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் மற்றும் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட தேர்வை எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. 34,842 மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வை எழுதவில்லை. 27ம் தேதி 718 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளனர். மற்ற மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வு எழுதலாம். இதற்காக அனைத்து இடங்களிலும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்.