சென்னை: கண்டலேறு அணையில் 20 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர வேண்டும். ஆனால், 10 நாட்களாகியும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு தண்ணீர் திறக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் 4.9 டிஎம்சி நீர் இருப் பு உள்ளது. இந்த நீரைக்கொண்டு 2 மாதங்கள் வரை குடிநீர் தேவைக்கு சமாளிக்க முடியும். எனவே, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆந்திர நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.