சென்னை: மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (34). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர். பிரித்திவிராஜ் 2வது திருணம் செய்ய முடிவு செய்தார். இதையறிந்த முதல் மனைவியின் சகோதரர்களான தாமோதரன், இளையராஜா உட்பட 5 பேர் பிரித்திவிராஜை காரில் மாமல்லபுரம் கடத்தி சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, மீண்டும் சத்யாவுடன் திருமணம் செய்து வைத்தனர்.