திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,877 ஆகவும், பலி எண்ணிக்கை 117 ஆகவும் உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.