புதுடெல்லி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 13 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக, ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிலர் சிகிச்சை பலனின்றி மருத்துவனைமனையில் இறந்தனர். இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.