12ம் தேதி மதிமுக மாவட்ட செயல்வீரர் கூட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும்  என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கடந்த ஜூன் 25ம் தேதி நடந்தது. ஜூலை 6ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.தொடர்ந்து, மாநிலம் முழுமையும், அனைத்து மாவட்ட கழகங்களின் கூட்டங்களையும் காணொலி வழியாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, ஜூலை 7ல் அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்யம், ஆட்சி மன்றக்குழு, தணிக்கைக் குழு, அணிகளின் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தநிலையில், மதிமுக பொதுச்செயலாளர் பங்கேற்கும், மாவட்டச் செயல்வீரர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் காணொளி சந்திப்புகள், ஜூலை 12ம் தேதி- தென்காசி மாவட்டம், 13ம் தேதி - திருவள்ளூர் மாவட்டம், 14ம் தேதி - காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், 18ம் தேதி- மாணவர் அணி, 19ம் தேதி- இளைஞர் அணி கூட்டம் மேற்கண்ட நாள்களில் மாலை 4 மணி முதல் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: