ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 3,962 பேர் கைது: 1,614 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும்  நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 962 பேரை  போலீசார் கைது செய்தனர். மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சில தளர்வுகளுடன் பொது மக்கள் வெளியே செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில், நேற்று ஒரே நாளில் நோய் தொற்று பரப்பும் வகையில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 962 வழக்குகள் பதிவு செய்து 4 ஆயிரத்து 475 பேரை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து 614 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 9 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக போலீசாரால் வசூலிக்கப்பட்டது.

Related Stories: