×

வெயில் தாக்கத்தால் மயக்கமடைந்து உயிருக்கு போராடிய மயிலை காப்பாற்றிய கிராம மக்கள்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குச்சூர் கிராமத்தில் இரை தேடி வந்த மயில் ஒன்று பறக்க முடியாமல் மயங்கி கிடந்தது. அதை பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் மற்றும் நடத்துனர் சந்திரசேகர் மற்றும் ஊர் பிரமுகர் ராஜா உள்ளிட்டோர் மயிலை மீட்டு காட்டுமன்னார்கோவிலுக்கு எடுத்து வந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.

மேலும் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் காட்டுமன்னார்கோவில் காவல் சிறப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் லெனின் சம்பவ இடத்திற்கு வந்து மயிலுக்கு முறையாக சிகிச்சை அளித்து சிதம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயிலை மீட்ட அரசு பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : The impact of the sun, the peacock, the villagers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி