சென்னை: சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று வர அனுமதி அளிக்கப்படும். முக்கவுசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற மற்ற நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.