13 பேரின் உயிர்களை பறித்த கொதிகலன் வெடித்த விபத்து : நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

டெல்லி : பாய்லர் வெடித்த விபத்து தொடர்பாக என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. என்எல்சியில் ஜூலை 1-ம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால்

என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே  என்.எல்.சி. விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இது தொடர்பாக  என்.எல்.சி. தலைமை மேலாண் இயக்குனருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் என்எல்சி விபத்து தொடர்பாக தாமாக விசாரணைக்கு எடுத்து கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

Related Stories: