லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் விகாஸ் துபேவை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தர பிரதேச போலீசார் எடுத்த நடவடிக்கையில் விகாஸ் துபே கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இன்று காலை ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.