புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் கிரண்பேடி, ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில் ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ முடிவுகள் தெரிவித்துள்ளது.