புழல்: கொரோனா நோய்தொற்றில் பலியான மூதாட்டியின் சடலத்தை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 22வது வார்டில் திருநீலகண்ட நகர் பிரதான சாலையை சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் புழல் அருகே காவாங்கரை இலங்கை அகதிகள் முகாம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.