மதுவிற்ற திருநங்கை கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஆனந்தி (37) என்ற திருநங்கை மதுபாட்டில்களை தனது வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: