×

அடுத்தடுத்து கார், மினிவேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கார் மற்றும் மினிவேன் மீது சரக்கு லாரி அடுத்தடுத்து மோதியதால், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (26). இவர், நேற்று தனது தந்தை தீனதயாளன் (50) என்பவரை ஆரணியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மீண்டும் காரில் வீடு திரும்பினார். அப்போது, பெரியபாளையம் அருகே வடமதுரை எம்டிசி நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. பின்னர், காருக்கு பின்னால் வந்த மினிவேன் மீது மோதியது.

இதில், காரில் இருந்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் ராம்குமார் மற்றும் மினிவேனில் வந்த முரளி, விக்னேஷ் ஆகிய 3 பேர்  படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் எஸ்ஐ கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, தீனதயாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags : truck crashes , Car, minivan, lorry collide, one killed, 3 injured
× RELATED சொந்த ஊர்களுக்கு செல்லும்போது...