×

மகளிர் சுயஉதவி குழுவில் 16 பேருக்கு நிதி உதவி

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் ஊரக தொழில்களை மேம்படுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதில் உள்ள 16 பேருக்கு ரூ.5,25000 கடனாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், வார்டு உறுப்பினர் அருள்ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினர்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் அலுவலர் கணபதி சங்கரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் தேவகி, அத்திப்பட்டு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு செயலாளர் விஜயா, ஊராட்சி செயலர் பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Women Self Help Group , Women, Self Help Group, 16 people, financial aid
× RELATED ஜெயங்கொண்டம் அருகே இலையூர்...