எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு நிவாரணம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏழை - எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார். அவைத்தலைவர் வெங்கல் ஜி.பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி டி.பாஸ்கர், நிர்வாகிகள் டி.முரளி, சீனிவாசன், டி.கே.முனிவேல், முருகன், கோடுவெளி குமார்,  மா.கம்யூ.சம்பத், மதிமுக வெங்கடேசன், விசிக பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, 1,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், 2 முட்டை, பிஸ்கட் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: