நடிகை ஜெயந்தி கவலைக்கிடம்?

பெங்களூரு: கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. இவர் கடந்த 5 நாட்களுக்கு முன் மூச்சு திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மருத்துவ பரிசோதனை வந்தது அதில் நடிகை ஜெயந்திக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு திணறல் இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று செய்தி பரவியது. ஆனால், நடிகை ஜெயந்தி நலமாக உள்ளார் என்றும் அவர் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: