திருப்புத்தூரில் இறந்த கோயில்காளை மரியாதையுடன் அடக்கம்

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் இறந்த ராஜகாளியம்மன் கோயில்காளை ஊர் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயில் மாடு உடல்நலம் சரியில்லாமல் நேற்று இறந்தது. இறந்த காளைக்கு வயது 19. உடல்நலம் பாதிப்பால் இறந்த கோயில் காளை, வாகனத்தில் வைத்து புதூரில் இருந்து புதுக்கோட்டை சாலை, கண்டரமாணிக்கம் ரோடு, பெரியகடைவீதி, செட்டிய தெரு, காளியம்மன் கோயில் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. காளைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் பூசி வழிபட்டனர். வழிநெடுகிலும் மாலை அணிவித்தனர்.

இறுதியாக ராஜகாளியம்மன் கோயில் அன்னதான திடலில் முருகன் கோயில் எதிரில் காளை ஊர்மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பல மஞ்சுவிரட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோயில் காளை இந்த பகுதியில் செல்ல பிள்ளை போல் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: