கோவில்பட்டி: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதியுடன் சிபிஐ-க்கு மாற்றியது தமிழகஅரசு. சிபிஐ விசாரணையைக் கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்களை பதிவுசெய்தனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை..!!
- ரேவதி
- மறு விசாரிக்கிறது
- CBCID
- சாத்தான்குளம் ஜெயராஜ்
- பென்னிக்ஸ்
- தலைமை ஆசிரியர் ரேவதி
- சட்டனூகா ஜெயராஜ்