×

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர். 5 பேரிடமும் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய பின் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீதும் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : policemen ,Satan ,death , Satan, father, son, arrested
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...