செங்கல்பட்டு: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். கொரோனா பாதித்த இடங்களை பார்வையிட்ட மத்திய குழு செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர்.