×

ஆன்லைனில் பாடம் நடத்துவதை உள்நோக்கத்துடன் எதிர்ப்பவர்கள் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் - மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

மும்பை: ஆன்லைனில் பாடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்க அரசு வெளியிட்ட உத்தரவை எதிர்த்து இம்ரான் சேக் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைனில் பாடம் கற்பித்தல், டிஜிட்டல் முறை கல்வியில் இந்தியாவை வலிமையாக்க உதவும் என தெரிவித்தனர். உலகமே மின்னாளுமை முறையில் ஆளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர். ஆன்லைன் முறையில் பாடம் கற்பிக்கும் அரசின் முடிவை எதிர்த்து உள்நோக்கத்துடன் கேள்வி கேட்கும் குடிமக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நிலையான இயக்க நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்துத் தொடர்புடையோரிடம் முறையிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.



Tags : Mumbai High Court ,Mumbai , Online lesson, Mumbai, High Court
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...