சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் பலதுறைகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ரயில்வே, விமான சேவை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.