சீனா அல்லது இந்திய துருப்புகள் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா? ..ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீன துருப்புக்கள் பின்வாங்கியதை நன் வரவேற்கிறேன். சீன துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடத்தையும், இப்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா? இதேபோல் இந்திய துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடம் எது? எந்தவொரு துருப்புக்களும் - சீனா அல்லது இந்திய - எல்.ஏ.சியின்(கட்டுப்பாட்டுக் கோடு) ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அவசியம். ஏனென்றால் ஜூன் 15 அன்று என்ன நடந்தது, எங்கு நடந்தது என்பதை அறிய இந்திய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர், என கூறியுள்ளார்.

முன்னதாக, லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய சீன இராணுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்களையும், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது.  இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. மேலும், ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில், கல்வான் பகுதியில் அமைந்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மற்றும் கூடாரங்களை சீன இராணுவம் அகற்றி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, சீனாவை போல இந்தியாவும் எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு படைகளை விலக்கி உள்ளது. இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டிருப்பதால் லடாக் எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த பதற்ற நிலை, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: