×

உப்பூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் மோர்பண்னை கிராமத்தில் தீர்த்தக் கரைக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது அதனை சரி செய்ய பொதுமக்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த விநாயகர் ஆலயம் உப்பூரில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு தான் சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் திருமணம் நடைபெறுகிறது. கோவிலில் காப்பு கட்டி சதுர்த்தி விழா நடைபெறும். பூக்குளி இறங்குதல், காவடி, திருப்பலம் எடுப்பவர்கள் அனைவரும் இந்த மோர்பண்ணை கடலுக்கு சென்று தீர்த்தம் ஆடி வந்த பின்புதான் மற்ற வைபவங்கள் நடைபெறும்.

பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் சென்று வரக்கூடிய சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதுபோல் சாலையின் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : road ,Uppur , Uppur, damaged road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...