திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வனத்துறை அலுவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தலைமை வனப் பாதுகாவலரிடம் சம்பளம் கேட்டு வந்துள்ளார் வனத்துறை அலுவலர் குமார். ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட குமார் தனது பாதி சம்பளத்தை அதிகாரியிடம் கேட்டுள்ளார். தலைமை வனப்பாதுகாவலர் முறையாக பதில் தரவில்லை என்று கூறி வனத்துறை தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.