வாஷிங்டன் : அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் விசாக்களில் சில தற்காலிக மாற்றங்களை டிரம்ப் அரசு செய்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாடப் பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி விட்டால் அவர்கள் அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டின் குடிவரைவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. நேரடியாக கல்வி கற்கும் படி, பாடத் திட்டத்தை மாற்றிக் கொண்டால் மட்டுமே அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தது. டிரம்ப் அரசின் இந்த திடீர் அறிவிப்பால், அமெரிக்காவில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.