திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக இடைவெளியை கடைபிடிக்க புதிய கருவியினை எஸ்.பி அரவிந்தன் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் முயற்சியால் கடைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கு, ஐரிஎஸ் என்ற புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பொது இடங்கள் மற்றம் அத்தியாவசிய கடைகளில், பொதுமக்களிடையே இரண்டரை அடி இடைவெளியை கடைபிடிக்க வழிவகை செய்கிறது.