சென்னை: சென்னையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த கூடுதல் டிஜிபி உட்பட 20 போலீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஊர்க்காவல் படையை சேர்ந்த கூடுதல் டிஜிபி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதேபோல், மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.