மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் கடந்த மே மாதம் 25ம் தேதியில் இருந்து நேற்று வரை 69,687 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சர்வதேச முனையத்தில் கடந்த மே மாதம் 9ம் தேதியிலிருந்து நேற்று வரை 12,215 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை 148 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு முனையத்தில் நேற்று 4 விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.