சென்னை: பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்ததானம் வழங்கிய 14 ரயில்வே காவலர்களை வரவேற்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16 ரயில்வே காவலர்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பினர்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் அங்கு கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் தாசப்பிரகாஷ் அருகே உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பு, அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காவலர் குடியிருப்பு, ராயபுரம் ரயில்வே காவலர் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.