சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டி உள்ளது. நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.