×

பொள்ளாச்சியில் நேரக் கட்டுப்பாடுகள்: நாளைமுதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் திறக்க அனுமதி..!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நாளைமுதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நகைக் கடைகள் மதியம் 2 மணி வரையும், உணவகங்களில் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை பின்பற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பொள்ளாச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளைமுதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக் கடைகள் மதியம் 2 மணி வரையும், உணவகங்களில் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்று காலத்தில் இடநெருக்கடி காரணமாக, பொள்ளாச்சி கிளை சிறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, தொற்று பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி கிளை சிறையில் உள்ள கைதிகளை, கோவை மத்திய சிறைக்கு இடம் மாற்ற சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Tags : Grocery stores ,Pollachi , Time restrictions in Pollachi: Grocery stores only open for 2 weeks from 6 am to 5 pm tomorrow !!
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!