திருச்சி: திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீயில் எரிந்த நிலையில் 9 ம் வகுப்பு மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமி மரணம் தொடர்பாக 11 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோமரசம்பேட்டை அருகே மாணவி எரித்துக் கொல்லப்பட்ட இடத்தை காட்டிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் தேடிவந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.