திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தது திருச்சி அரசு தலைமை மருத்துவமனை

திருச்சி: திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீயில் எரிந்த நிலையில் 9 ம் வகுப்பு மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமி மரணம் தொடர்பாக 11 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோமரசம்பேட்டை அருகே மாணவி எரித்துக் கொல்லப்பட்ட இடத்தை காட்டிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் தேடிவந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியின் ஆடையை வைத்து அடையாளம் கண்டு கொண்ட பெற்றோர் இது குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் நேற்று 3 தனிப்படைகள் அமைத்த நிலையில் இன்று 11 தனிப்படைகள் அமைக்க எஸ்.பி உத்தரவிட்டார்.  10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: