துமாகூர்: கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 14,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 401 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என கூறினார். தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். துமாகூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.