சென்னை : சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக 50 துரித செயல் வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கென 50 துரித செயல் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் 50 துரிதச் செயல் வாகனத்தின் மதிப்பு ரூ.3.80 கோடி மதிப்பீடு என கூறப்படுகிறது. தற்போது இந்த துரித செயல் வாகனம் சென்னையில் பயனுள்ளதாக இருக்கும் எனவும், கொரோனா தடுப்பு பணிக்காக இந்த வாகனங்கள் பயன்படத்தப்படும் என கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரூ. 1,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முகவரி மாறி வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இல்லத்துக்கே சென்று நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.