×

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொலை.! போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி அதவத்தூர்பாளையத்தில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மர அரவை ஆலையைச் சேர்ந்த ஒருவரிடம் பல மணி நேரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.  அரவை ஆலையில் சிசிடிவி பதிவு நிறுத்தப்பட்டிருந்ததால் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  குற்றவாளிகளை  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  அதவத்தூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று எரித்துக் கொலை செய்யப்பட்டார். மதியம் மாயமான சிறுமி முள்காட்டில் பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Tags : death ,Trichy Police , Trichy, 14-year-old girl, burnt to death
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...