மண்டியா தொகுதி சுயேட்சை எம்பி சுமலதா அம்பரீசுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு: மண்டியா தொகுதி மக்களவை உறுப்பினர் (சுயேச்சை) சுமலதாவுக்கு கொரோனா பாசிடிவ் இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சுமலதா அம்பரீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த சில நாட்களாக ஓய்வு இல்லாமல் எனது தொகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிவாரண பணிகள் செய்து வந்தேன். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை எனக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது. உடனடியாக பரிசோதனை செய்த போது, கொரோனா உறுதியாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இன்று (நேற்று) முதல் எனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற தொடங்கியுள்ளேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், எந்த சவாலையும் ஏற்கும் மன தைரியமும், தொகுதி மக்களாகிய உங்களின் ஆசீர்வாதமும் உள்ளதால் விரைவில் குணமாகி மீண்டும் மக்கள் சேவையில் ஈடுபடுவேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: